நாமக்கலில் டோக்கன் விநியோகம் செய்த சுயேட்சை - கண்டுபிடித்த பறக்கும் படை

நாமக்கல்லில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் டோக்கன் கொடுத்து பரிசு பொருட்கள் வழங்கிய விவரத்தை தேர்தல் பறக்கும் படையினர் கண்டுப்பிடித்தனர்.

Update: 2021-04-01 13:16 GMT
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் எருமப்பட்டி, பவித்திரம், நவலடிப்பட்டி, வரகூர் கோம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது எருமப்பட்டி கைக்காட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சண்முக சுப்பரமணி தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த பிரச்சார வாகனமான TN 88 B 5002 என்ற எண் கொண்ட டாடா சுமோ வாகனத்தை சோதனையிட்டதில் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த சுவாமி படம் போட்ட 12 ஆயிரம் டோக்கன்களை கைப்பற்றி ஓட்டுனர் முகமது பைசலிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது  வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் மூலம் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து டோக்கனை பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News