சேந்தமங்கலம் பகுதியில் 26 -ம் தேதி மின்சாரத்தடை என அறிவிப்பு

சேந்தமங்கலம் பகுதியில் 26 -ம் தேதி மின்சாரத்தடை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-07-24 10:15 GMT

சேந்தமங்கலம் பகுதியில் வரும் 26ம் தேதி மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் துணைமின் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவுர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துக்காப்பட்டி, புதுக்கோம்பை, பளையபாளையம், சிவநாயக்கன்ப்பட்டி, லக்கமநாயக்கன்ப்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News