எருமப்பட்டியில் தாய், மகள் மாயம்: போலீசார் விசாரணை

எருமப்பட்டியில் தாய், மகள் திடீரென்று காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-26 10:00 GMT

பைல் படம்.

எருமப்பட்டி கர்ணன் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (35), பால் வியாபாரி. இவருக்கு அனுசியா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி காலை அனுசியா தனது மகளுக்கு உடல்நிலை சரி இல்லாததால் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றவர், பின்னர் வீடு திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் செந்தில்குமார் தனது மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தரக்கோரி எருமப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News