சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம்

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாகம் நடைபெற்றது.

Update: 2022-04-20 02:30 GMT

சேந்தமங்கலம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாகம் நடைபெற்றது.

சேந்தமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி என்எஸ்எஸ் திட்டம், ரெட்கிராஸ், ரெட்ரிப்பன் கிளப் மற்றும் மற்றும் பேளுக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வெங்கடேசன், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், ரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களின் பங்கு, சுகாதார வாழ்வுக்கான வழி முறைகள் ஆகியவை குறித்து விளக்கினார். தொகுதி சுகாதார அலுவலர் வெங்கடாசலம் மேற்பார்வையில் ரத்த தான முகாம் நடைபெற்றது. தொடர்ந்து ரத்த தானம் வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பேளுக்குறிச்சி மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சவுமியா பாக்கியம், ரெட் ரிப்பன் கிளப் திட்ட அலுவலர் ராமநாதன், என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் திலிப், பிரபு, இணை அலுவலர் பிரியங்கா உள்ளிட்டட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் திலிப் நன்றி கூறினார்.

Tags:    

Similar News