சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

POCSO Act in Tamil -நாமக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-19 04:30 GMT

POCSO Act in Tamil -நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரதராஜபுரம் பஞ்சாயத்து, கஸ்தூரிப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி துறையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் 12-ந் தேதியன்று இரவு மகளை காணவில்லை என அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி பார்த்தனர். கண்டுபிடிகக முடியாததால், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அலங்காநத்தம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்த சந்திரகுமார் மகன் கவுதம் (21) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News