காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் 21- ம்தேதி மின் வினியோகம் நிறுத்தம்

காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் 21- ம்தேதி மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-19 10:00 GMT

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியில் நாளை மறு நாள் 21 ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில், 21ம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி, காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமாநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News