கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

Update: 2021-01-02 11:00 GMT

பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற மூலிகை சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. நேற்று புத்தாண்டை முன்னிட்டு கொல்லிமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் என்ற சூழலில் இன்று கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார்.இதனால் கொல்லிமலை அடிவாரமான காரவள்ளி சோதனைச்சாவடியில் போலீசார் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த 500க்கும் மேற்பட்டோர் கவலையுடன் திரும்பி சென்றனர்.

Tags:    

Similar News