ஆதரவற்றோர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய இன்ஸ்பெக்டர்

Update: 2021-01-01 07:45 GMT

நாமக்கல்லில் ஆதரவற்றோருடன் புத்தாண்டு கொண்டாடிய இன்ஸ்பெக்டரை அனைவரும் பாராட்டினர்.

2021 புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் சுகுமார், புத்தாண்டை கொண்டாடும் விதமாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினார். இன்ஸ்பெக்டர் சுகுமாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Tags:    

Similar News