வெண்ணந்தூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: இளம்பெண் தற்கொலை

வெண்ணந்தூர் அருகே காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-04 07:00 GMT

ராசிபுரம் தாலுக்கா, வெண்ணந்தூர் அருகே அலவாய்ப்பட்டி பஞ்சாயத்து, ஆண்டிவலசு பகுதியில் பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. அந்த கிணற்றில், இளம்பெண்ணின் உடல் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ராசிபுரம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி இளம்பெண்ணின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அங்கு சென்று விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில், கிணற்றில் சடலமாக மிதந்தது நடுப்பட்டி கிராமம், நரிக்கல் காடு பகுதியை சேர்ந்த ராஜி மகள் அஞ்சலை ( 19) என்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணையில் அஞ்சலை பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனமுடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News