இராசிபுரம் பகுதியில் நாளை மின்தடை: மின்சார வாரியம் அறிவிப்பு

இராசிபுரம் பகுதியில் நாளை மின்சார விநியோகம் தடைபடும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2021-07-22 04:29 GMT

இராசிபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால், நாளை 23ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும். இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாய்க்கன்பட்டி, சிங்களாந்தபுரம், அரசம்பாளையம், வேளம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிப்புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், கண்ணூர்பட்டி, நத்தமேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News