கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2022-04-17 03:45 GMT

கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோயிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

இராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பண்ணையம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்று அலங்காரம் நடைபெற்றது. லட்சார்ச்சனை மற்றும் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது.

மாலையில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், திளான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வழிபட்டனர். இரவு வானவேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள்விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News