ராசிபுரம் அருகே தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆயிபாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Update: 2022-07-14 02:45 GMT

ராசிபுரம் அருகே ஆயிபாளையத்தில் நடைபெற்ற, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், ஆயிபாளையத்தில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்று காலத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கிய நிகழ்ச்சி, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜனனியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்து அவரது தாயாருக்கு ஆறுதல் கூறிய நிகழ்ச்சி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சி, 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேற புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற வருமுன் காப்போம் திட்ட நிகழ்ச்சி, திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி, கொரோனா தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை அறிந்துகொண்டனர்.

Tags:    

Similar News