ராசிபுரம் கூட்டுறவு செசைட்டியில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை

ராசிபுரம் கூட்டுறவு செசைட்டியில் ரூ.35 லட்சத்திற்கு பருத்தி ஏல விற்பனை

Update: 2021-07-20 02:54 GMT

ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (ஆர்சிஎம்எஸ்) மூலம் கவுண்டம்பாளையத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், புதுப்பாளையம், பட்டணம், வடுகம், பூசாரிபாளையம், காக்காவேரி, சிங்களாந்தபுரம், நத்தமேடு, கண்ணூர்பட்டி, கவுண்டம்பாளையம், சீராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 945 பருத்தி மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

சேலம், ஈரோடு, அவினாசி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 772-க்கும், அதிக பட்சமாக ரூ.9 ஆயிரத்து 330-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 35 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News