இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான பருத்திஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2021-08-18 02:30 GMT

விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பருத்தி.

இராசிபுரம் :

இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.21 லட்சம் மதிப்பிலான பருத்திஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

இராசிபுரம் வேளாண் உற்பத்தியாளரர்கள் கூட்டுறவு சொசைட்டியின் (ஆர்சிஎம்எஸ்), அக்கரைபட்டி கிளையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. அக்கரைபட்டி, பொரசல்பட்டி, மல்லசமுத்திரம், மாமுண்டி, ராசாபாளையம், மதியம்பட்டி, நத்தமேடு, குருசாமிபாளையம், வெண்ணந்தூர், சவுதாபுரம், மின்னக்கல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 693 மூட்டை பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் கோவை, அவினாசி, திருப்பூர், ஆத்தூர், மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு நேரடி ஏலம் மூலம் பருத்தியை கொள்முதல் செய்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் பருத்தியை போட்டி போட்டு கொண்டு எடுத்தனர்.

இதில் ஒரு குவிண்டால் சுரபி ரக பருத்தி ரூ.9,620 முதல், அதிகபட்சமாக ரூ.10,399 வரை ஏலம் போனது. மொத்தம் 693 மூட்டை பருத்தி ரூ.21 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News