நாமகிரிப்பேட்டை பகுதியில் நாளை மின் வினியாகம் நிறுத்தம்

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-04-03 07:30 GMT

பைல் படம்.

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: ராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை 4ம் தேதி திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்சாரத்தடை ஏற்படும். இதையொட்டி நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, குரங்காத்துபள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர்பந்தல் காடு, அரியா கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், ஜேடர்பாளையம் வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சாரம் வினியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News