சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து டிவிட்டரில் வெளியீடு: வாலிபர் கைது

POCSO News -ராசிபுரம் அருகே சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, டிவிட்டரில் வெளியிட்ட வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-06-23 02:30 GMT

பைல் படம்.

POCSO News -ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அஜித்குமார் (24), எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து டிவிட்டரில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையொட்டி, போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோர்ட்டு உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News