ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

ராசிபுரம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-27 07:34 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பட்டணம் முனியப்பம்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்.பிக்கு தகவல் கிடைத்தது. எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்பேரில், நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில், 30 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறலைக் கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (51) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (47). சுண்ணாம்பு சூளை நடத்தி வருகிறார். இவருடைய சுண்ணாம்பு சூளை அருகே உள்ள கொட்டகையில் 35 லிட்டர் கொண்ட மண்பானையில் சாராய ஊறல் போட்டுள்ளதாக நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உடனடியாக அங்கு சென்ற போலீசார் சாராய ஊறல் இருந்த பானையை அழித்தனர். இதையடுத்து சாராய ஊறல் போட்டதாக பொன்னுசாமியை கைது செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News