இராசிபுரம் நகராட்சியில் ரூ.3.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் துவக்கம்

இராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.3.16 கோடி மதிப்பீட்டில், வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.

Update: 2022-03-29 00:15 GMT

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில், ரூ.3.16கோடி மதிப்பில், வளர்ச்சித் திட்டப்பணிகளை, அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். அருகில் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர்.

இராசிபுரம் நகராட்சி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா, டிஆர்ஓ கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.3.16 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

முன்னதாக, நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில், 38 கடைகள், 48 திறந்தவெளிக் கடைகள், 2 வாகன நிறுத்துமிடம் மற்றும் காய்கறி ஏற்றி, இறக்குமிடத்துடன் கூடிய தினசரி மார்க்கெட் கட்டும் பணிகளையும், வார்டு எண் 8 பகுதியில் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணியையும், 15 -வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளையும் அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். ராசிபுரம் நகராட்சித் தலைவர் கவிதா சங்கர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News