ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டி ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-04-26 02:00 GMT

பைல்படம்.

ராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (ஆர்சிஎம்எஸ்) கிளை, பவர் ஹவுஸ் பின்புறம் செயல்படுகிறது. இங்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டுவந்திருந்தனர். திருச்செங்கோடு, சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, வருகை தந்த வியாபாரிகள், நேரடி ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர். ஏலத்தில் 359 பருத்தி மூட்டைகள் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

ஏலத்தில், ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.10,789-க்கும், அதிகபட்சமாக ரூ.13,789-க்கும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9,900 முதல் அதிகபட்சமாக ரூ.10,969-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,949 முதல் அதிகபட்சமாக ரூ.9,690-க்கும் ஏலம் போனது.

Tags:    

Similar News