ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் சாவு

ஜேடர்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

Update: 2022-01-16 06:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள கண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுகுமார் (24), லாரி டிரைவர். சம்பவத்தன்று அவர் தனது டூ வீலரில் ஆனங்கூர் அருகே உள்ள கழுவங்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஓடிய டூ வீலர் கீழே விழுந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுகுமார் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News