பரமத்திவேலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

பரமத்திவேலூர் அருகே டூ இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2022-04-26 02:15 GMT

பைல்படம்.

பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மீது டூ வீலர் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர் தாலுக்கா, ஓலப்பாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (42). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி தனது டூ வீலரில், ஜேடர்பாளையம் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திருபிக் கொண்டிருந்தார். அப்போது கொளக்காட்டுப்புதூர் அருகே வந்தபோது ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர் மீது, சசிகுமார் ஓட்டி வந்த டூ வீலர் மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்த சசிகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகுமார் உயிரிழந்தார். இது குறித்து ப.வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News