பரமத்திவேலூர் அருகே டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி பலி

பரமத்தி வேலூர் அருகே டூ வீலர் மோதியதால் நடந்து சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-18 06:00 GMT

பைல் படம்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம், இந்திராநகர் காலனியைச் சேர்ந்தவர் வீரன்(50). கூலித்தொழிலாளி. இவர் செங்கப்பள்ளி சென்று விட்டு இந்திரா நகர் காலனிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

எல்லைமேடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் வந்த டூ வீலர் வீரன் மீது மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரன் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News