சமையல் செய்யும்போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழப்பு

பரமத்தி அருகே சமையல் செய்யும்போது சேலையில் தீப்பிடித்ததால் பெண் உயிரிழந்தார்.

Update: 2022-08-23 03:00 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள சானிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாளி. இவருடைய மனைவி ராமாயி ( 75), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அடுப்பில் இருந்த விறகு வெடித்து அதில் இருந்து தீப்பொறி பறந்து ராமாயி அணிந்திருந்த சேலையில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியதால் ராமாயி சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை நாமக்கல் அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி ராமாயி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News