பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதப் போராட்டம்

Latest Disability News India - பரமத்தி வேலூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பரமத்தி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-23 02:45 GMT

பைல் படம்.

Latest Disability News India - நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, கூடுதல் கட்டிடத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக அறை தொலைவில் உள்ளதாகவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், முன்பு இயங்கிய இடத்திலேயே அறை எண் 6, 7, 8 தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, பரமத்தி வேலூர் பகுதி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், பரமத்தி தாசில்தார் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர், சங்க செயலாளர் சதீஷ்குமார் பேராட்டத்திற்கு தலைமை வகித்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற, பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், டி/எஸ்பி ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த மாற்றுத்திறாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News