பரமத்தி வேலூரில் ரூ. 2.42 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் மூலம் விற்பனை

பரமத்தி வேலூரில் ரூ. 2.42 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.

Update: 2022-06-29 03:15 GMT

வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தேசிய எலக்ட்ரானிக் வேளாண்மை மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை டெண்டர் முறையில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, விவசாயிகள் 7,772 கிலோ தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.24.85க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.10க்கும், சராசரியாக ரூ.24க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,89,657க்கு விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு விவசாயிகள் 10,550 கிலோ தேங்காய்களை கொண்டு வந்திருந்தனர். டெண்டரில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.24.36க்கும், குறைந்தபட்சமாக ரூ.18க்கும், சராசரியாக ரூ.23-க்கு விற்பனை நடைபெற்றது. மொத்தம் ரூ.2,42,290 மதிப்பில் தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Tags:    

Similar News