பரமத்தி வேலூரில் கபடிப் போட்டி: குமாரபாளையம் அணிக்கு முதல் பரிசு

பரமத்திவேலூர் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபாடி போட்டியில் குமாரபாளையம் அணி முதல் பரிசை வென்றது.

Update: 2022-05-17 02:30 GMT

ப.வேலூரில் நடைபெற்ற கபாடி போட்டியில், முதல் பரிசு பெற்ற குமாரபாளையம் அன்னை தெரசா அணிக்கு, மாநில பாஜக தலைவர் டாக்டர் ராமலிங்கம் பரிசுக்கோப்பை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில், பாஜக சார்பில், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் கபாடி போட்டி நடைபெற்றது. மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். மொத்தம் 16 கபாடி அணிகள் கலந்துகொண்ட. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன.

இறுதிப் போட்டியில் குமாரபாளையம் அன்னை தெரசா அணி, தன்னை எதிர்த்து விளையாடிய, அணிச்சம்பாளையம் அனிச்சை பிரதர்ஸ் அணியை 20:16 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது. முன்னதாக அரை இறுதியில் குன்னிபாளையம் கண்ணீர் துளி அணி வெற்றி பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முதல் பரிசு பெற்ற குமாரபாளையம் அன்னை தெரசா அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ. 10,001 பரிசு வழங்கினார். 2-ம் பரிசு அனிச்சை பிரதர்ஸ் அணிக்கு ரூ. 7,001/-, 3-4-ம் பரிசுகள் குன்னிபாளையம் கண்ணீர் துளி மற்றும் திருச்செங்கோடு முரளி பிரதர்ஸ் ஆகிய அணிகளுக்கு தலா ரூ. 4001/- வீதம் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு அணிச்சம்பாளையம் கதிர், குமாரபாளையம் ஏழுமலை, குன்னிபாளையம் தீபன், திருச்செங்கோடு கார்த்தி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட பாஜ பொதுச்செயலாளர் முத்துகுமார், பரமத்தி-வேலூர் ஒன்றிய தலைவர் அருண், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், நடுவர்கள் ராஜா, ஜெகநாதன், சரவணன், ஆறுமுகம் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News