பரமத்திவேலூர் அருகே சாக்கடையில் தவறி விழுந்து தொழிலாளி பலி

பரமத்திவேலூர் அருகே தொழிலாளி ஒருவர் சாக்கடையில் தவறி விழுந்து இறந்தார்.

Update: 2022-03-16 06:30 GMT

பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் ரோட்டோரம் இருந்த, சாக்கடை கால்வாயில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்,  சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் தன்னாசிமேடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் (45) என்பது தெரியவந்தது. இவருடைய மனைவி இந்திராணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டதாகவும், சேகர் மட்டும் தனது தாயார் அன்னபூரணியுடன் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்தது. கூலித்தொழிலாளி சேகர் சாக்கடை கால்வாயில் எப்படி தவறி விழுந்து இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News