பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள் மோதி கொண்ட விபத்து: ஒருவர் பலி

பரமத்திவேலூர் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரழந்தார்.

Update: 2021-08-28 03:30 GMT

பைல் படம்

கரூர் மாவட்டம், ராயனூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 22-ந் தேதி கரூரில் இருந்து பரமத்தியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மொபட்டில் வந்தார்.

பின்னர் மீண்டும் கரூருக்கு திரும்பிச் சென்றார். சேலம்-கரூர் பைபாஸ் ரோட்டில், பரமத்திவேலூர் பிரிவு அருகே வந்தபோது, அவருக்கு பின்னால் வந்த டூ வீலர் அவரது மொபட்டின்மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த, முத்துக்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News