பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: லாரி டிரைவர் பலி

பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்ததில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2021-07-14 03:30 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் வேலுமணி (47), லாரி டிரைவர். இவர் தனது மனைவி கார்த்திகா (43) மற்றும் குழந்தைகளுடன், கரூர் மாவட்டம் தளவாபாளையம் திலீப் நகரில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று தனது, தாயாரைப் பார்க்க பரமத்தி அருகே உள்ள பில்லூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலுமணி சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் பள்ளித்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேலுமணி தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News