நாமக்கல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-12 08:00 GMT

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவுகளில் இருந்து மண்புழு தயாரிக்கும் தொட்டியை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நாமக்கல் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சித்தட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியத்தில், கபிலக்குறிச்சி நர்சரிகார்டன், கருப்பனார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு அவர்களிடம் உரையாடினார்.

கோப்பணம்பாளையம்பஞ்சாயத்தில் ஊராட்சி, புங்கம்பாளையம் கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தில் மண் வரப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊரக வேலைத்திட்ட பணிகளை பார்வையிட்டார். உரம்பு பஞ்சாயத்தில், அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் 5,000 செடிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள நர்சரியை பார்வையிட்டார்.

அங்கன்வாடி மைய கட்டிடம், சமுதாய ஊட்டச்சத்து தோட்டம் மற்றும் புங்கம்பாளையத்தில் 15-வது நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.54,000 மதிப்பீட்டில், உரக்குழி அமைக்கப்பட்டுள்ளதையும், ரூ.39,000 மதிப்பீட்டில் மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டு மண்புழு உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பிஆர்ஓ சீனிவாசன், பிடிஓக்கள் சங்கர், பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News