பரமத்தி அருகே டூ வீலர் மீது கார் மோதி விபத்து: பெண் பலி

பரமத்தி அருகே டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-08-22 02:30 GMT

பைல் படம்

பரமத்தி வேலூர் தாலுக்கா, தேவிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் சுதா தனது இரண்டு குழந்தைகள், தாய் ராசம்மாள் (50) ஆகியோரை தனது டூ வீலரில் அழைத்துக் கொண்டு நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

பரமத்தி, மரவாபாளையம் பிரிவு சந்திப்பில், ரோட்டை கடப்பதற்காக டூ வீலரை நிறுத்தினார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

அதில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சுதாவின் டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராசம்மாள், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சுதா மற்றும் அவரது 2 குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News