கந்தம்பாளையம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இன்ஜினியர் உயிரிழப்பு

கந்தம்பாளையம் அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு. மற்றொருவருக்கு பலத்த காயம்.

Update: 2021-12-04 03:00 GMT

கந்தம்பாளையம் அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் இன்ஜினியர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பரமத்திவேலூர் தாலுக்கா, கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் பிரகாஷ் (29), வெளிநாட்டில் சிவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். தற்போது சொந்த ஊருக்கு வந்து தங்கியிருந்தார். சம்பவத்தன்று, இரவு பிரகாஷ் டூ வீலரில் குன்னமலை சென்று கொண்டிருந்தார். அப்போது, தொட்டியந்தோட்டத்தை சேர்ந்த ஜெகதீசன் (34) என்பவர், கந்தம்பாளையம் செல்வதற்காக எதிர் திசையில் தனது டூ வீலரில் வந்தார். குன்னமலை சமத்துவபுரம் 4 ரோடு அருகே இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெகதீசன் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News