பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை

பரமத்தி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Update: 2022-02-04 00:00 GMT

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் முருகேசன் ( 55). கூலித் தொழிலாளி. இவர் பல உடல்நலமின்றி பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும், நோய் குணமடையவில்லை என்று கூறப்படுகிண்றது. இதனால் வெறுப்படைந்த முருகேசன்,  கடந்த மாதம் 28-ந் தேதி, வீட்டில் இருந்போது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைக்கண்ட அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News