மனைவியுடன் தகராறால் விரக்தி: மது பாட்டிலால் குத்தி தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கூலி தொழிலாளி, மது பாட்டிலால் குத்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-06-04 09:15 GMT
மனைவியுடன் தகராறால் விரக்தி: மது பாட்டிலால் குத்தி தொழிலாளி தற்கொலை

பைல் படம்.

  • whatsapp icon

நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் ராஜேந்திரன், இவரது மகன் ராஜன் (25), கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனிதா கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராஜன் கடந்த 1-ம் தேதி அதிகளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் குடிபோதையில் மதுபாட்டிலை உடைத்து அதை தனது கழுத்தில் குத்திக் கொண்டாராம். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News