மொளசி அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

பரமத்தி வேலூர், மொளசி அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-16 01:15 GMT

பரமத்தி வேலூர் அருகே, ஜேடர்பாளையம் அருகே, உள்ள மொளசி, விட்டம்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ் (31). லாரி டிரைவர். இவருடைய மனைவி முருகாயி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். நாகராஜ்க்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், முருகாயி கணவருடன் கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளுடன் பவானியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் நாகராஜ் மன வேதனை அடைந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நாகராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News