பரமத்திவேலூர் பகுதியில் தேங்காய் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்திவேலூர் பகுதியில் தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-10-20 02:30 GMT

நாமக்கல் விற்பனை குழுவின், பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. பரமத்திவேலூர், பாலப்பட்டி, மோகனூர், பாண்டமங்கலம், ஜேடர்பாளயைம், கபிலர்மலை பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், தேங்காய்களைக் கொண்டு ஏலம் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4,588 கிலோ தேங்காய் வரத்து வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.27-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1,18,309-க்கு விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 1,783 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.28.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.28-க்கும், சராசரியாக ரூ.28.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.50,973 மதிப்பில் விற்பனை நடைபெற்றது. கடந்த வாரத்தை விட தேங்காய் விலை உயர்ந்ததால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News