பரமத்திவேலூர் பகுதியில் வரும் 16ம் தேதி மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு

பரமத்திவேலூர் பகுதியில் வருகிற 16ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2021-10-14 03:00 GMT

பைல் படம்.

இது குறித்து பரமத்திவேலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்த்தில் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 16ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.

இதனால், பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News