பரமத்திவேலூரில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேர் கைது: டூவீலர் பறிமுதல்..!

பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டூ வீலரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-06-08 08:00 GMT

பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து மணல் திருட்டுக்கு பயன்படுத்திய டூ வீலரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் உத்தரவின்படி, வேலூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் பொத்தனூர் காவிரி ஆற்றுபட் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, காவிரி ஆற்றங்கரையில் சிலர் டூ வீலரில் மணலை மூட்டைகளாகக் கட்டி திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, பொத்தனூரைச் சேர்ந்த கோபிநாத் (30) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த டூ வீலரை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ப.வேலூர் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

Similar News