வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-03-24 01:30 GMT

குமாரபாளையம் அருகே வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே வீ. மேட்டூர் மாரியம்மன் கோவில் திருவிழா,  ஒரு வாரம் முன்பு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன் தினம் காவிரி ஆற்றில் இருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. மலர்களாலும், வண்ண வண்ண மின் விளக்குகளாலும்அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மாரியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார்.

இன்று, மார்ச் 24ல் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்து வழிபடவுள்ளனர். திருவிழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags:    

Similar News