குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு முகாம்
அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் 75 நபர்க ளுக்கு மார்பு எக்ஸ்ரே, சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன;
குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் காசநோய் ஒழிப்பு முகாம் நடந்தது.
நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பாக குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் முன்பு, காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா? என பொதுமக்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் 75 நபர்களுக்கு மார்பு எக்ஸ்ரே, சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் மாவட்ட காசநோய் துறை துணை இயக்குனர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் ரம்யா பங்கேற்று, பொதுமக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு வழங்கினர். முதுநிலை சிகிச்சை மேற்பாற்வையாளர் அருள்மணி, சுகாதார ஆய்வாளர் பிரவீன் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களும் கலந்து கொண்டு காசநோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தனர்.
தமிழக அரசின் சார்பில் குழந்தைகள் நலனுக்காக, மாணவ, மாணவியர் நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு கட்டமாக அங்கன்வாடி குழந்தைகளுக்காக ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின்படி, அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம், கலைவாணி தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு கவுன்சிலர் கோவிந்தராஜ் பங்கேற்று ஊட்டச் சத்துணவு வழங்கினார்