பிரம்ம குமாரிகள் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம்

குமாரபாளையத்தில்பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரத்தை நகர் மன்றத்தலைவர் தொடக்கி வைத்தார்;

Update: 2023-06-01 03:45 GMT

குமாரபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது

பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் குமாரபாளையத்தில் நடைபெற்றது.

மது, சிகரெட், பான்பராக், உள்ளிட்ட போதை பொருட்கள் சாப்பிடுவதால்,ஏற்படும் தீமைகள் குறித்து பிரம்ம குமாரிகள் ராஜயோக தியான நிலையம் சார்பில் புகையிலை ஒழிப்பு பிரசாரம் மற்றும் நாடகம் பள்ளிபாளையம் பிரிவு, பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் நடந்தது. நிர்வாகி ரவி தலைமை வகித்தார்.

இதில் எமதர்மன் வேடமிட்ட நபர், சிகரெட், மது, பான்பராக் வேடமிட்ட நபர்களுடன் சேர்ந்து, மனிதர்களை அழிப்பது போல் நடித்து காட்டப்பட்டது.இதனை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தாசில்தார் சண்முகவேல், இன்ஸ்பெக்டர் தவமணி துவக்கி வைத்தனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.

கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பாடல்கள் மூலமும், வசனங்கள் மூலமும் நடித்து காட்டி சேலம் ரேவதி கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சி காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை, கவுரி தியேட்டர் பிரிவு சாலை, ராஜம் தியேட்டர் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் திரண்டு நின்று இந்த நிகழ்ச்சியை கண்டு விழிப்புணர்வு பெற்றனர். இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ சந்தியா, துணை தாசில்தார் ரவி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ. ஜனார்த்தனன், உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags:    

Similar News