அரசு மருத்துவமனைக்கு போர்வைகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் 100 போர்வைகள் வழங்கினார்;

Update: 2023-09-28 09:00 GMT

குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி 100 போர்வைகள் வழங்கினார்.

குமாரபாளையம்  அரசு மருத்துவமனைக்கு  முன்னாள் அமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுமான தங்கமணி  100 போர்வைகள் வழங்கினார்.

இது குறித்து குமாரபாளையம்  அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: மருத்துவ  மனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு தினம் ஒரு போர்வை வழங்க வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. போதிய போர்வைகள் இல்லாததால் உதவி கேட்டோம். முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, 80 ஆயிரம் மதிப்பிலான நூறு புதிய போர்வைகள் வழங்கினார்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் மூன்று கட்டங்களாக தேசியதரச் சான்று குழுவினர் ஆய்வு செய்தனர். 13 பிரிவுகளில் நடந்த ஆய்வில் 93 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. இதன்பலனாக தற்போது தேசிய தரச்சான்று கிடைத்துள்ளது. இது மாவட்ட அளவில் ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அடுத்து மூன்றாவதாக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கிடைத்துள்ளது. மேலும் லட்சயா திட்டத்தின் கீழ் மகப்பேறு அறை, அறுவை சிகிச்சை அறை, ஆகியன ஆய்வு செய்யப்பட்டது.

அதிலும் 95 மதிப்பெண்கள் கிடைக்கப்பெற்று, மாநில சுகாதார அமைச்சர் சுப்ரமணியம், சுகாதாரத்துறை இயக்குனர் கதன்தீப்சிங், லட்சயா திட்ட இயக்குனர் ஷில்பா பிரபாகர் ஆகியோர் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளனர். இந்த விருதுகள் பெற காரணமாக இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்குரியவர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

ஜி.ஹெச். செவிலியர் மேற்பார்வையாளர் சாந்தி, நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.



Tags:    

Similar News