குமாரபாளையம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சித்திரை வெள்ளியை முன்னிட்டு, குமாரபாளையம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.;
சித்திரை வெள்ளிக்கிழமையையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அதை தொடர்ந்து அலங்கார, ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.