சமயசங்கிலியில் ஆகஸ்ட் 11 ல் மின் தடை

குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில் ஆக. 11ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுமென அறிவிக்கப் பட்டுள்ளது;

Update: 2023-08-09 13:15 GMT

பைல் படம்

குமாரபாளையம் அருகே சமயசங்கிலியில்  ஆக. 11ல் மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

சமயசங்கிலி துணை மின் நிலையத்தில் ஆக. 11ல் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News