பல்லக்காபாளையம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையப்பகுதிகளில் (ஆக 29) இன்று மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது;
பைல் படம்
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக (ஆக. 29) செவ்வாக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது பற்றி பள்ளிபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் கோபால் வெளியிட்ட தகலல்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி, குமாரபாளையம் மற்றும் காவேரி ஹைடெக் பார்க் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை .மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.