ஓவியர் மாருதி மறைவுக்கு ஓவியர்கள் அஞ்சலி
ஓவியர் மாருதி மறைவுக்கு குமாரபாளையத்தில் ஓவியர்கள் அஞ்சலி செலுத்தினர்;
ஓவியர் மாருதி மறைவுக்கு குமாரபாளையத்தில் ஓவியர்கள் அஞ்சலி செலுத்தினர்
ஓவியர் மாருதி மறைவுக்கு குமாரபாளையத்தில் ஓவியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல ஓவியர் மாருதியின் ஓவியம் குறித்து அறியாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார்.
இவரது மறைவிற்கு குமாரபாளையம் ஓவியர்கள் சங்க நிர்வாகிகள், ஆனங்கூர் பிரிவு சாலையில், மாருதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒவ்வொருவரும் மாருதியின் ஓவியத்தால் எப்படி ரசிகர் ஆனோம் என்றும், அவரால் ஓவிய துறைக்கு வந்தது குறித்தும் நினைவு கூர்ந்து பேசினார்கள். இதில் பொதுநல அமைப்பினர் உள்பட பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் மறைந்த ஓவியருக்கு நடிகர் சாப்ளின் பாலு உள்பட பலர் மலரஞ்சலி செலுத்தினர். குமாரபாளையம் ஓவியர் சங்க துணை தலைவர் சிவகுமார் உடல்நலமில்லாமல் உயிரிழந்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் சங்க தலைவர் பொன் கதிரவன் தலைமையில், சிவகுமார் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஓவியரும், திரைப்பட நடிகருமான சாப்ளின் பாலு பங்கேற்று மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார்.
பின்னர் மறைந்த ஓவியர் சிவகுமார் குறித்து அவர் பேசியதாவது: சிவகுமார் உயரம் ஐந்தரை அடி. ஆனால் சமீபத்தில் குமாரபாளையம் நகரில் ஓவியர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த என் உருவத்தை எட்டு அடி உயரத்திற்கும் மேலாக பல இடங்களில் உயரமான சுவற்றில் வரைந்தார். இது அவர் தொழில் ஈடுபாடு. செய்யும் தொழிலில் அவர் போல் அனைத்து ஓவியர்களும் ஈடுபாட்டுடன் பாடுபட வேண்டும். மிகவும் அன்பானவர் என்பதால் அனைவரின் மனதிலும் இடம் பெற்றுள்ளார்.
அவர் நம் மனங்களில் வாழ்கிறார். ஒரு லட்சம் பேர் உள்ள இந்த குமாரபாளையம் நகரில், 30 பேர் மட்டும் தான் ஓவியர்களாக உள்ளனர். வரும்காலத்தில் இந்த தொழில் அழியாமல் இருக்க, பயிற்சி வகுப்புகள் நடத்தி, இளைஞர்களை இந்த தொழிலில் ஈடுபட வைக்க வேண்டும். அனைத்து ஓவியர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாழ்வில் முன்னேற வேண்டும். சிவகுமார் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓவியர் சங்க குடும்பத்தினர் நிர்கதியாக இல்லாத அளவிற்கு நிதி ஆதாரத்தை பெருக்க முயற்சி செய்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்பினைச் சேர்ந்த விடியல் பிரகாஷ், சரவணன், பாண்டியன், நாகராஜ், சசி, கருணாகரன், காளிமுத்து, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.