நாமக்கல்: குமாரபாளையம் பைபாஸ் சாலையில் கொரோனா பரிசோதனை முகாம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பை பாஸ் சாலையில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

Update: 2021-05-28 07:34 GMT

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பை பாசில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை முகாம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பைபாஸ் சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் பயணியர் நிழற்குடையில்  கொரோனா தொற்று தடுப்பு மருத்துவ குழுவினர் சார்பில் கொரோனா தொற்று பரிசோதனை இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் வரிசையில் நின்று தொற்று பரிசோதனை செய்து கொண்டனர்.

கடந்த சில வாரங்களாகவே குமாரபாளையத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் குமராபாளையம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News