குமாரபாளையம் அருகே லாரி - டூவீலர் விபத்தில் ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே லாரி, டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Update: 2022-01-03 14:00 GMT

குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர் ராஜன், 51. எல்.ஐ.சி. முகவர். இவர் தனது பைக்கில் சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில்,  நேற்று முன்தினம் இரவு 07:00 மணியளவில் சென்றார். அப்போது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி உரசியதில்,  ராஜன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News