தாலுகா அலுவலக சுவர்களில் வளரும் மரங்களால் சேதமாகி வரும் சுவர்கள்

குமாரபாளையம் தாலுகா அலுவலக சுவர்களில் விளையும் மரங்களால் சுவர்கள் சேதமாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு;

Update: 2023-07-27 13:30 GMT

குமாரபாளையம் தாலுக்கா அலுவலக சுவர்களில் வளரும்  மரங்களால் சுவர்கள் சேதமாகி வருகிறது

குமாரபாளையம் தாலுக்கா அலுவலக சுவர்களில் வளர்ந்து வரும்  மரங்களால் சுவர்கள் சேதமாகி வருகிறது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் தற்காலிகமாக நகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. தாலுக்கா அளவிலான பகுதிகளிலிருந்து பெரும்பாலான பொதுமக்கள் பல்வேறு பணிகள் காரணமாக இங்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலக பக்கவாட்டு நுழைவுப்பகுதியில் உள்ள சுவற்றில் அரசமரம் ஒன்று பூமியில் இருந்து சுவற்றை குடைந்து கொண்டு சுவற்றின் உயரத்திற்கு மேலாக வளர்த்துள்ளது. இது நாளாக, நாளாக பெரிதா வளரும் போது, இந்த சுவர் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு அலுவலகத்தின் நுழைவுப்பகுதி காண்போரை முகம் சுளிக்கும் விதமாக உள்ளது. எனவே இந்த மரத்தை அகற்றி சுவர் விழாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் விநியோகிக்கும் பணி துவங்கி உள்ளது. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் இதற்காக மொத்தம் 20 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை படிவங்கள் வழங்கும் பணியில் ஈடுபடுத்தபட்டு வருகின்றனர்.

இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.ஓ. பொறுப்பு அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் பங்கேற்று ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கினார்.இதில் கிராமநிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



Tags:    

Similar News