ஆசிய யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப் வென்ற குமாரபாளையம் மாணவர்கள்

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்;

Update: 2023-07-01 08:45 GMT

ஆசிய யோகாசன போட்டியில்  சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குமாரபாளையம் மாணவ,மாணவியர்

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப்பட்டம் வென்றனர்.

ஆசிய அளவிலான யோகாசன போட்டிகள் தாய்லாந்து நாட்டில், பாங்காங் நகரில் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் இந்திய அணிக்காக குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற 25 மாணவ, மாணவியர்களும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆசிய அளவிலான யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இவர்களை தமிழ்நாடு யோகா பெடரேசன் பொது செயலர், இந்தியா யோகா அணியின் தேர்வாளர், யோகா பயிற்சியாளர் அரவிந்த் தலைமையில் அழைத்து சென்றார். சாதனை படைத்த மாணவ, மாணவியரை முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் ஓராண்டு இலவச யோகா பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது. குமாரபாளையம் சுந்தரம் நகர் நகராட்சி தொடக்க பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் இலவச யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி ஓராண்டுக்கு வழங்கப்படும். எஸ்.ஐ. சந்தியா யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். யோகா பயிற்சியை யோகா பயிற்சியாளர் உஷா வழங்கவுள்ளார்.

யோகா பற்றி மூத்த பயிற்சியாளர்கள் கூறியதாவது: யோகக் கலை அல்லது யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. மேலும் யோகா வஜ்ரயான மற்றும் திபெத்திய புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.

யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. . சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன.. இந்து தத்துவத்தின் படி யோகம் என்பது சீவாத்மா, பரமாத்மாவுடன் இணைதலுக்கான வழி எனப்படுகிறது. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Tags:    

Similar News